திரைப்படம் : மௌன ராகம்
பாடல் : பனி விழும் இரவு
இசை : இளையராஜா






ஆண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூ பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா...வா...வா.....

பெண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது


~~@@~~ பின்னிசை ~~@@~~ 


பெண் :
பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க

ஆண் :
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க

பெண் :
மாலை விளக்கேற்றும் நேரம் மனதில் ஒருகோடி பாரம்

ஆண் :
தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவை இல்லாத தாபம்

பெண் :
தனிமையே போ....இனிமையே வா.....
நீரும் வேரும் சேர வேண்டும்.

ஆண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு

~~@@~~ பின்னிசை ~~@@~~ 

ஆண் : 
காவலில் நிலைகொள்ளாமல் தாவிடும் மனது

பெண் :
காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது

ஆண் :
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்

பெண் :
என்னைக் கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும்

ஆண் :
விரகமே ஓர் .... நரகமோ சொல் 
பூவும் முள்ளாய் மாறிப் போகும்

பெண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூ பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா...வா...வா.....

ஆண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு ..... 

0 comments:

Post a Comment

Kindly drop in your thoughts here :

 
Top